வவுனியாவில் ஊஞ்சல் தடி உடைந்து வீழ்ந்ததில் 5 மாதக் குழந்தை சாவு
Reported by Ada Derana
11 hours ago
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உள்ள குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குழந்தையின் தாயும் காலில் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கனகராயன்குளம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளவிசுட்டான் கிராமத்தில் ஒரு வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலின் தடி எதிர்பாராத விதமாக முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் தாயுடன் இருந்த 5 மாதக் குழந்தை மீது அந்த தடி விழுந்ததால் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இந்த விபத்தில் குழந்தையின் தாயாரின் காலிலும் தடி விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொலிஸார் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.